சைவவைணவ போட்டி ஒன்றுக்கொன்று பொருத்தம். - சித்திரபுத்திரன். குடி அரசு - கட்டுரை - 22.03.1931

Rate this item
(0 votes)

இராமன் பிறப்பும் சுப்ரமணியன் பிறப்பும் ஒன்று போலவே கற்பிக்கப் பட்டிருக்கின்றது. இரண்டு பேர்களும் பூமி பாரம் தீர்க்கவும் ராகரிதர்கள் அசுரர்கள் அக்கிரமங்களை அழிக்கவும் தோன்றினவர்கள், இராமன் பிறப்பதற்காகவும் தேவர்கள் விஷ்ணுவை வேண்டிக்கொண்டார்கள். சுப்ர மணியன் பிறப்பதற்காகவும் தேவர்கள் சிவனை வேண்டிக்கொண்டார்கள்.

இராமன் ஒரு மனிதன் விந்திலிருந்து பிறந்தான். ஆனால், சுப்ரமணி யன் சிவன் விந்திலிருந்து தோன்றினான். இராமன் ராக்ஷதர்களைக் கொன் நான் சுப்ரமணியன் அசுரர்களைக் கொன்றான். இராமன் செய்த சண்டையில் ராஷ்தர்களைக் கொல்லக் கொல்ல மூலபவம் தானாக உற்பத்தியாய்க் கொண்டே இருந்தது. 

அதுபோலவே சுப்ரமணியன் அகரர்களைக் கொல்லக் கொல்ல சும்மா தானாகவே அசுரர்கள் உற்பத்தியாய்க் கொண்டிருப்பதும் தலையை வெட்ட வெட்ட மறுபடியும் முளைத்துக் கொண்டே இருந்தது. இன்னமும் பல விஷயங்களில் ஒற்றுமைகள் காணலாம். ஆகவே இரண்டும் ஒன்றுக் கொன்று போட்டிக்காக உண்டாக்கப்பட்டக் கற்பனைக் கதைகள் என்பது விளங்கும். மற்றும் பெரியபுராண 63 நாயன்மார்கள் கதையும் பக்த விலாமிர்த ஹரி பக்தர்கள் கதையும் அநேகமாக ஒன்றுபோலவே கற்பிக்கப்பட்டிருப்பதை காணலாம். பெரிய புராண நாயன்மார்களில் குயவர் வகுப்பு என்பதற்காக ஒரு நாயன்மாரை திருநீலகண்ட நாயனார் என்று உற்பத்தி செய்தது போலவே பக்தவீவாமிர்தத்திலும் குயவர் வகுப்புக்காக கோராகும்பார் என்பதாக ஒரு பக்தரை கற்பித்து இருக்கின்றார்கள். பெரிய புராணத்தில் பறையர் வகுப்பு என்பதற்காக நந்தனார் என்பதாக ஒரு நாயனாரை சிருஷ்டித்தது போலவே பக்தலீலாமிர்தத்திலும் பறையர் வகுப்புக்காக சொக்கமேளா என்கின்ற ஒரு பக்தரை சிருஷ்டித்து இருக்கின்றார்கள். இப்படியே மற்றும் பல நாயனார் களும், ஹரிபக்தர்களும் கற்பிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் சம்மந்தமான கதைகளும் ஏறக்குறைய ஒன்று போலவே கற்பிக்கப்பட்டிருக்கின்றன. 

உதாரணமாக, திருநீலகண்ட நாயனார் தன் பெண் ஜாதியோடு கோபித்துக் கொண்டு ஒருவருக்கொருவர் திரேக சம்மந்தமில்லாமலிருந் ததை சரி செய்ய சிவபெருமான் சிவ யோகியாக வந்து இருவரையும் சேர்த்து வைத்ததாகக் கதை உண்டாக்கப்பட்டிருக்கின்றது. 

அதுபோலவே பக்த லீவாமிர்தத்தில் கோராகும்பாரும் தன் மனைவியுடன் கோபித்துக் கொண்டு ஒருவருக்கொருவர் தேக சம்மந்தமில்லாமல் இருந்ததைச் சேர்த்து வைப்பதற்காகவே விஷ்ணு பெருமான் தோன்றி இருவர்களையும் சேர்த்து வைத்ததாகவே கதை கற்பிக்கப்பட்டிருக்கின்றது. 

அதுபோலவே பெரிய புராணத்தில் நந்தனாருடைய கதையிலும் நந்தனாணக் கோவிலுக்குள் விடும்படி பரமசிவன் இரவில் நந்தனார் கனவில் வந்து சொன்னதாகக் கற்பிக்கப்பட்டிருக்கின்றது. 

பக்த லீலாமிர்தத்தில் சொக்கமேளர் (சொக்கமாலா என்றும் சொல்வ துண்டு என்னும் பறையர் ஒருவரை விஷ்ணு இரவில் வந்து கோவிலுக்கு அழைத்துப் போனதாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது. 

இப்படி அநேகக் கதைகள் சைவத்திற்கும், வைணவத்திற்கும் போட்டி போட்டு கற்பிக்கப்பட்டிருக்கின்றன. இரண்டிலும் பார்ப்பனர்களுக்கும். அர்ச்சகர்களுக்கும் உயர்வுகள் கற்பிக்கப்பட்டிருப்பதிலும் ஒன்று போலவே கற்பிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். இரண்டிலும் ஜாதி வித்தியாசத்தை உறுதிப்படுத்தி பிறகு அந்த குறிப்பிட்ட நபர்கள் விஷயத்தில் மாத்திரம் மிக்க கடினமான நிபந்தனைமீது மன்னிக்கப்பட்டிருப்பதையும் பார்க்கலாம். ஆகவே இவைகள் சிவனும், விஷ்ணும் ஆகிய இரு கடவுள்களும் ஒருவருக் கொருவர் போட்டி போட்டுக் கொண்டு செய்தார்களா? அல்லது இரண்டு சமயத்தின் பேராலும், ஜாதிகளை நிலை நிறுத்தவும், மதப் பிரசாரத்திற்கும், வயிற்றுப் பிழைப்புக்கும் வழிதேடும் ஆசாமிகளால் கற்பிக்கப் பட்டதா என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்து கொள்ளவேண்டும். 

ஏனெனில் நாம் சொன்னால் அது மிகுந்த தோஷமாக ஏற்பட்டு, பெரிய பாவத்திற்காளாக வேண்டியதாய் போய்விடும்." 

குடி அரசு - கட்டுரை - 22.03.1931

Read 76 times

Like and Follow us on Facebook Page

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.